Sunday 29 September 2013

தெய்வத் திருகல்யாண உற்சவ அழைப்பிதழ்

 
Locate the Temple


கணபதி ஹோமத்தின் சிறப்பு என்ன தெரியுமா?


கணபதி ஹோமத்தின் சிறப்பு என்ன தெரியுமா?

எந்தத் தொழில் தொடங்கினாலும் கணபதி ஹோமம் செய்தபிறகு துவக்குவது மிகச்சிறந்த பலனைத்தரும். வீடுகளில் கிரகப்பிரவேசம் நடத்தும் போது கணபதி ஹோமம் நடத்தி, புதுவீடு புகுவது எக்காலமும் நன்மை தரும். 

குடும்பத்தில் தொடர்ந்து சுகவீனம் ஏற்பட்டால் கணபதி ஹோமம் நடத்தி உடல்நிலை நன்றாகப் பெறலாம். ஒரு கடிதம் எழுதும் போதும் கூட பிள்ளையார் சுழியுடன் துவங்குவது மரபு. விநாயகரே முழு முதற்கடவுள்.

சிவபெருமான் முப்புரங்களையும் அழிக்க புறப்பட்ட போது கணபதி மந்திரத்தை சொல்ல தவறிவிட்டார். எனவே செல்லும் வழியில் அவரது தேர் பழுதானது. 

பெற்ற பிள்ளையாக இருந்தாலும்கூட கணபதியை வணங்கிய பிறகே எந்த செயலையும் துவங்க வேண்டும் என உத்தரவிட்டவரே சிவபெருமான்தான். 

அவரே அந்த விதியை கடைபிடிக்காததால் இந்த நிலைமை ஏற்பட்டது. சிவபெருமானின் தேர் அச்சு முறிந்த இடத்தை இப்போது அச்சிறுபாக்கம் என்று அழைக்கிறார்கள்.

செங்கல்பட்டு அருகே இந்த ஊர் அமைந்துள்ளது. இங்குள்ள விநாயகரையும் அச்சிறு விநாயகர் என்றே அழைக்கிறார்கள். கணபதி ஹோமத்தை விநாயகர் வேள்வி என்றும் சொல்வதுண்டு. 

விநாயகரை வணங்கி, விநாயகர் குறித்த மந்திரங்கள் ஓதி, அவரை புகழ்ந்து பக்திப்பாடல்களை மனமுருகிப் பாடி கணபதி ஹோமத்தை நிறைவேற்ற வேண்டும். 

புதிய இயந்திரங்கள் வாங்கினால் அவை பழுதின்றி இயங்க விநாயகர் வேள்வி அவசியம்.

Also view the related Wikipedia Links

1. In English: http://en.wikipedia.org


Also view the related Dinamalar Links



Also view the Devotional song 

கணபதியே வருவாய்..... அருள்வாய்


துறவுரை


This Blog Spot is meant for publishing Spiritual and Devotional Postings about this Temple as we collected from the renowned Dailies, Magazines, etc., so as to keep it as a ready reckoner by the Devotees. As such the readers may extend their gratitude towards the Author as we quoted at the bottom of each Post under the title "Courtesy".